Sunday, September 5, 2010

ரயில் பயணம்

ரயில் பயணம்
சிக்கு புக்கு ரயில் பெட்டி எங்கள் நாட்டிற்கு நீ நகை பெட்டி
உன் தண்டவாளங்களில் தான் எத்தனை கதைகள்
சில கதைகள் மலரா விதைகள்
உன் வருகையின் சத்தம் கூட
அவனுக்கு என காத்திருக்கும் காதுகளுக்கும் சங்கீதம்
குகைகளை குடைந்து நீ செல்ல... பகைகளும் பறந்து மறந்து செல்லும்
உன் பாதையில் பல பாலங்கள், என் பாதையில் பல வண்ணங்கள்...
நம் பாதையில் பல சந்திப்புகள்
தடம் புரண்ட வாழ்க்கைக்கு நீ சொல்வதுதான் என்ன?
பயணங்கள் முடிவதில்லை..........................

1 comment:

Aarti said...

Inga thedi
anga thedi
finally found ur blog!! :D

u shd connect ur blog to Fb..so inga post pannina anga varum :)