Sunday, October 31, 2010

Hercules MTB Himachal Experience

கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை - அன்று சொன்னோம் கடவுளை தேடி
சேரும் , சகதியும் சைக்கிளுக்கு மெத்தை- இமயத்தில் இன்று சொன்னோம் கடவுளாய் மாறி
இயற்கை என்று ஒரு காதலன் , சைக்கிள் என்று ஒரு காதலி படைத்ததோ ஒரு சரித்திரம்
டீஐ என்று ஒரு படைப்பாளி, ஹஸ்பா என்று ஒரு உழைப்பாளி நாங்கள் கண்டோம் வெள்ளி விழா
கண்ட இயற்கை கனவாக மறைந்தாலும் அந்த நட்பு மலர்கள் மணம் இன்னும் வீசுதடா
முருகப்பா உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை ....
உன் குழந்தை டீஐ வாழிய வாழியவே
அன்புடன்
சுபாஷ் தியாகராஜன்

Monday, October 18, 2010

நகரம் செல்வோம்

நகரம் செல்வோம் -------பயண சிந்தனைகள்

நகரம் செல்வோம் என்று சொல்லி வீரமாக கிளம்பினர் மூவர்
நகரத்தில் நடக்கும் சம்பவங்கள் ....

என் வீட்டிற்கு நான் தான் சிங்கம் என்று மனைவியை உதைத்தான் ஒரு அசிங்கம்
மருமகளும் ஒரு மகள் தானே ? ஏன் தேல் போல் சொட்களால் கொட்டுகிறீர்கள்?
வந்துவிட்டான் இவளுக்கு என முதலை கண்ணீர் வடிக்க....

இதை கண்ட மூவர் மனதில் பல கேழ்வீ கள்? இது நகரமா ? நரகமா?
நமக்கு தான் ஐந்து அறிவு...ஆறு அறிவு கொண்ட மனிதர்கள் எங்கே?
வருத்தத்துடன் அந்த பெண் விடுதலைக்கு வேண்டும் ....சிங்கம், தேல், முதலை.

Sunday, September 5, 2010

ரயில் பயணம்

ரயில் பயணம்
சிக்கு புக்கு ரயில் பெட்டி எங்கள் நாட்டிற்கு நீ நகை பெட்டி
உன் தண்டவாளங்களில் தான் எத்தனை கதைகள்
சில கதைகள் மலரா விதைகள்
உன் வருகையின் சத்தம் கூட
அவனுக்கு என காத்திருக்கும் காதுகளுக்கும் சங்கீதம்
குகைகளை குடைந்து நீ செல்ல... பகைகளும் பறந்து மறந்து செல்லும்
உன் பாதையில் பல பாலங்கள், என் பாதையில் பல வண்ணங்கள்...
நம் பாதையில் பல சந்திப்புகள்
தடம் புரண்ட வாழ்க்கைக்கு நீ சொல்வதுதான் என்ன?
பயணங்கள் முடிவதில்லை..........................

Tuesday, August 31, 2010

யார் இவள் ?

யார் இவள் ?
கரு கரு விழிகள் துரு துரு இயற்கை
விறு விறு பேச்சு பர பர வாழ்கை
மழை துளி போல் என் வாழ்வில் வந்தாள்
முள்ளும் ரசிக்கும் ரோஜாவை போல் என் இதயத்தை தைத்தாள்
அந்த மண் வாசனை தாக்கியதா தெரியவில்லை ... அவள் வாசம் தாக்கியது
யார் இவள் ? எங்கே வந்தாள் ? எதற்கு வந்தாள் ? ஏன் வந்தாள் ?
சந்தித்தது என்னவோ சிலநேரம் தான்...ஆனால் அவளை பற்றி பல சிந்தனைகள்
இது ஏன் கனவாக இருக்ககூடாது ? என்று என்னா
நிஜம் என்னை பார்த்து கை கொட்டி சிரித்தது
காதலில் விழுந்து விட்டேநோ ? தெரியவில்லை ....
மோகமுள்ளும் குத்தவில்லை
யார் இவள் ?

வண்ணங்கள்

வண்ணங்கள்
வெள்ளை மனதுடன் நம் வாழ்கை துவங்க
நீல அலைகள் போல் மேலும் கீழும் நம் பயணம் செல்ல
ஊதா உன் காதலுக்கு தூதாக போக
மஞ்சளுடன் மங்கை உன் வாழ்வுக்கு வழி கொடுக்க
செந்நிற குங்குமம் அவள் அழகுக்கு அழகு சேர்க்க
கருப்பும் அழகு தான் என்று பொறுப்புடன் பேச
பச்சை பசுமையாய் எனக்கு எண்ணங்கள் தோன்ற
வண்ணங்கள் உன் கன்னங்கள்... தேன் கிண்ணங்கள்

வானம்

வானம்
என்றும் எங்களை அன்புடன் வரவேற்கிறாய்
பல வண்ணங்களுடன் பட்டாம்பூச்சியையும் புலம்ப செய்கிறாய்
நீ கருக்க, அந்த உழவன் சிரிக்க...வயதையும் மறந்து உன்னை ரசிக்க
இடி இடிக்க, மழை பெருக்க, ஒரு யுகம் போதுமா உன்னை வர்ணிக்க??

சுதந்திரம்

சுதந்திரம்
யுத்தம், ரத்தம், சத்தம், முத்தம்.
யுத்த சத்தத்தை நிறுத்தி ரத்த வெறியை ஒழித்து
மழலைகளின் முத்த சதத்தால் பாரதத்தை உருவாக்குவோம்
சுதந்திர நல் வாழ்த்துக்கள்